×

பஞ்சாப், கோவா, உத்தராகண்ட் மாநிலங்களில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

டெல்லி: பஞ்சாப், கோவா, உத்தராகண்ட் மாநிலங்களில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். பஞ்சாப்பில் 117, கோவாவில் 40, உத்தராகண்ட்டில் 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், கோவா, உத்தராகண்ட் மாநிலங்களில்:

வேட்புமனு தாக்கல்: ஜனவரி 21

மனுதாக்கல் செய்ய கடைசி நாள்: ஜனவரி 28

மனுக்கள் மீதான பரிசீலனை: ஜனவரி 29

வாபஸ் பெற கடைசி நாள்: ஜனவரி 31

வாக்குப்பதிவு: பிப்ரவரி 14

வாக்கு எண்ணிக்கை: மார்ச் 10

Tags : Punjab ,Goa ,Utharakhand ,Chief Election Commission , election
× RELATED பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28...