×

தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் : இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

டெல்லி : தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் : இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது, சட்டப்பேரவைத் தேர்தலில் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.இ- விஜில் என்ற செயலியில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பாக புகார்களை அளிக்கலாம்.உ.பி., பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலங்களில் வேட்பாளர்கள் தலா 40 லட்சம் வரை செலவிட அனுமதி வழங்கப்படுகிறது. கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் வேட்பாளர் தலா 28 லட்சம் வரை செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,என்றார்.


Tags : Chief Election Commission of India , பூஸ்டர் டோஸ்,இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
× RELATED வாக்காளர்களிடம் மாவட்ட தேர்தல்...