சென்னை: பிரதமரின் பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்பு மீறல் நடந்ததாக குற்றம் சாட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.இது ஏற்கெனவே திட்டமிட்ட நாடகமோ? என்ற வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறிய அவர்,பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்குடன் மாநில காங்கிரஸ் அரசை கலைக்கும் மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றார்.