×

நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

சென்னை : நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பேரவையில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் துரைமுருகன், அதிமுக சார்பில் விஜயபாஸ்கர், மனோஜ் பாண்டியன்,காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  விசிக சார்பில் சிந்தனைச் செல்வன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், பாமக சார்பில் ஜி.கே.மணி, மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : Assembly ,Neid ,Stalin , நீட் விலக்கு,அனைத்துக் கட்சி கூட்டம் ,முதல்வர் ஸ்டாலின்
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு