×

சாத்தூர் அருகே 5ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்து வழக்கில் உரிமையாளர் கைது.! போலீசார் அதிரடி

சாத்தூர்: சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டியில் 5ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்து வழக்கில் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விஜயகரிசல் குளத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பூமாரியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டியில் கடந்த 5-ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்த விபத்து தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ளவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், விஜயகரிசல்குளத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பூமாரியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரனை காவல்துறை தேடி வருகிறது.

Tags : Sattur Police Action , Owner arrested in 5th case of firecracker factory explosion near Sattur Police Action
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்