×

பயிற்சிக்கு வந்த மாணவியை கர்ப்பமாக்கிய டுடோரியல் கல்லூரி முதல்வர் குண்டாசில் கைது

அந்தியூர்: தனித்தேர்வு பயிற்சிக்கு வந்த 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டுடோரியல் கல்லூரி முதல்வர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் அந்தியூரிலுள்ள  வனத்துறை அலுவலகம் எதிரே தனியார்  டுடோரியல் கல்லூரி நடத்தி வந்தவர் லோகநாதன் (38). இவர் தன்னிடம் 10ம் வகுப்பு தனித்தேர்வு பயிற்சிக்கு வந்த 17 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். இதில், அந்த மாணவி கர்ப்பமானார்.  இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், கொடுத்த புகாரின் பேரில் பவானி அனைத்து மகளிர் போலீசார், கடந்த டிசம்பர் 4ம் தேதி லோகநாதனை போக்சோ வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் லோகநாதன் மீது ஈரோடு போலீஸ் எஸ்பி சசிமோகன் பரிந்துரையை ஏற்று ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள லோகநாதனிடம் வழங்கப்பட்டது.

Tags : Kundas , Training, Student, Tutorial College, Principal, Arrested
× RELATED அமெரிக்க துணை தூதரகத்தில் போலி...