சென்னை: கொரோனா ஊரடங்கில் காவல்துறையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கின்போது அத்தியாவசியப் பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். முழு ஊரடங்கின் போது பால், மின்சாரம், சரக்கு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களை அனுமதிக்க அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது.