திருப்பூர்: திருப்பூர் சிவிரிப்பாளையத்தில் பரமசிவன் கோவிலில் மூலவர் சிலை கடத்தப்பட்டு, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவால் மீட்கப்பட்டது. இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கில், கடவுள் சிலையை ஆஜர்படுத்த கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதற்கு கண்டனம் விதிக்கப்பட்டுள்ளது. சிலையை ஆய்வு செய்ய வேண்டுமானால், வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும், விசாரணைக்காக சிலைகளை ஆஜர்படுத்த உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.