கோவை: கோவை அம்மன்குளம் பகுதியில் 34 வயதான ராதா என்பவரின் முகத்தில் மர்மநபர்கள் ஆசிட் வீசினர். ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த ராதா அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தருமபுரியை சேர்ந்த ராதா கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மர்மநபர்கள் ஆசிட் வீசியுள்ளனர்.