×

10ம் தேதி முதல் திருப்பதி மலைப்பாதை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் இரண்டாம் மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் முடிந்து 10ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 2வது மலைப்பாதையில் கனமழை காரணமாக கடந்த டிசம்பர்1ம்தேதி பாறை உருண்டு விழுந்ததில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் வாகனங்கள் செல்ல இயலாத அளவிற்கு 4 இடங்களில் சாலைகள் முழுமையாக சேதமடைந்தது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடந்த இச்சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

அந்த பாதையில் போக்குவரத்தை நிறுத்தி போர்க்கால அடிப்படையில் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இணைப்பு சாலையை வழியாக ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர். மறுபுறம் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் பக்கசுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாறைகள் உடைந்து விழும் அபாயத்தில் உள்ள இடத்தில், ராக் போல்ட் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டுமானப் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வரும் 10ம் தேதி மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தேவஸ்தான தலைமை பொறியாளர் ஜெகதீஸ்வர் நேற்று தெரிவித்தார்.

Tags : Tirapati , Tirupati Hill Tracts, Temple, Announcement
× RELATED ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும்...