×

மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா ஒத்திவைப்பு: பாஜக மாநில தலைவர் அறிவிப்பு

சென்னை: மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று காரணமாக பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

ஜனவரி 12-ம் தேதி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொண்டு கல்லூரிகளைத் திறந்துவைக்க பிரதமர் மோடி ஜனவரி 12-ம் தேதி விமானம் மூலம் சென்னை வருவதாக இருந்தது. பிறகு தமிழகத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் தமிழகம் வரும் பிரதமர் மோடி, மதுரையில் பா.ஜ., சார்பில் நடக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்பார் என தமிழக பா.ஜ.க தெரிவித்திருந்தது.

ஒமைக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்திருந்தார்.


Tags : Pongal ceremony ,Narendra Modi ,Maduray ,Bajaka , Madurai, Prime Minister Narendra Modi, Pongal Festival, BJP State President,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...