சென்னை: சென்னை எம்.ஐ.டி. கல்லூரியில் 80 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அவர்களில் 41 மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். மீதம் உள்ள மாணவர்கள் கல்லூரியில் சிகிக்சை பெற்று தனிதனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 762 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.