மதுரை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீதான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. 2016ல் நெல்லையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனுதாரர் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் கருத்து தெரிவிக்கவில்லை எனக்கூறி வழக்கு ரத்து செய்யப்பட்டது.