×

அந்தியூர் அண்ணா மடுவு பகுதியில் அதிகாரிகள் திடீர் சோதனை வாகன தணிக்கையில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம்; 2 லாரிகள் பறிமுதல்

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் பவானி ரோட்டில் அண்ணாமடுவு உள்ளது. இந்த பகுதியில் ஈரோடு வட்டார போக்குவரத்து செயலாக்க அலுவலர் சரவணன் தலைமையில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடகா, கேரள மாநிலங்களை சார்ந்த  வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் அதிக பாரம் ஏற்றி வந்தது, முறையாக அனுமதி இல்லாமல் வாகனங்கள் ஓட்டியது, எப்சி காலாவதியானது மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டியது குறித்து சோதனை செய்தனர். இதில் பல்வேறு வாகனப் போக்குவரத்து குற்றங்களுக்காக வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 2 லாரிகள் முறையான ஆவணங்கள் இன்றி இயங்கியதால் பறிமுதல் செய்து பவானி வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வந்தனர்.

Tags : Anthiyur Anna Maduvu , Authorities raid Anthiyur Anna Madu area Rs 1 lakh in vehicle inspection 40 thousand fine; 2 trucks confiscated
× RELATED ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி...