சென்னை: ஞாயிறன்று முழு ஊரடங்கு நாளில் போட்டி, நேர்முக தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தேர்வு எழுத செல்வோருக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேர்வுக்கு செல்பவர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டு அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதத்தை காண்பித்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.