×

ஜம்மு காஷ்மீரில் தொடரும் அதிரடி: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், ஜன.6: ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி உள்ளன. இதில், தீவிரவாதிகள் தினமும் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த அதிரடி நேற்றும் தொடர்ந்தது. புல்வாமா மாவட்டத்தில் உள்ள சந்த்கம் கிராமத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்ததால், அங்கு விரைந்த வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகளை சுற்றிவளைத்த வீரர்கள், அவர்களை சரணடையும்படி எச்சரித்தனர். ஆனால், அவர்கள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜெய்ஷ் இ தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்தவன். இவர்கள் வைத்திருந்த ஏராளமான வெடிப்பொருட்கள், ஏகே ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Jammu and ,Kashmir , Ongoing action in Jammu and Kashmir: 3 militants shot dead
× RELATED ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது...