×

காரியாபட்டி அருகே வேளாண் மாணவர்கள் நெல் அறுவடை பயிற்சி

காரியாபட்டி : திருவில்லிபுத்தூர் அருகே கலசலிங்கம் கல்லூரியின் இறுதியாண்டு இளநிலை வேளாண்மை மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் காரியாபட்டி பகுதிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் காரியாபட்டி அருகே முஷ்டகுறிச்சி கிராமத்தில் நிலங்களில் விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்தனர். பின்னர், நெற்பயிரில் உள்ள நெற்பழ பூஞ்சான நோய் பற்றிய தடுப்பு முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாணவர்கள் சிவநந்தா, சீனிவாசன், வீரமணிதங்கம், ராம், அருண்குமார், ஜெயராம், கருப்புச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Kariyapatti , Kariyapatti: Final year undergraduate agricultural students of Kalasalingam College near Srivilliputhur under the Village Gold Scheme Kariyapatti
× RELATED நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி