×

மண்டபம் பகுதி மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!!

கொழும்பு: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மண்டபம் பகுதி மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து கடந்த மாதம் 19 ஆம் தேதி தென்கடலான மன்னார்வளைகுடா கடல் பகுதியில் வேறு 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து, மன்னார் சிறையில் அடைத்தது.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, 2 நாள் காவல் நீட்டிப்பு செய்ய உத்தரவிட்டது. காவல் நீட்டிப்பு முடிந்த நிலையில் மீண்டும் மண்டபம் பகுதி மீனவர்கள் 12 பேரையும் இன்று ஆஜர்படுத்திய போது அவர்களை விடுதலை செய்ய மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக தமிழக மீனவர்களை விடுவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணைஅமைச்சர் எல். முருகன் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.


Tags : Hall, Fishermen, 12, Liberation, Court of Ceylon
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.4-ம் தேதி வரை நீடிப்பு!