சென்னை: நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என சட்டப்பேரவையில் ஆளுநர் பேசினார். முதலமைச்சரின் முயற்ச்சியால் மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார். சிறுபான்மையினர் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.