திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் ரயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை செய்த சம்பவத்தில் மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மாணவர் மனோஜ் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஹாரிஸ் என்ற மாணவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் கேலி செய்ததால் கல்லூரி மாணவர் குமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.