×

மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 700 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடு கட்ட பணி ஆணை-அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

திண்டிவனம் :  மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி துறை சார்பில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். ஒன்றிய பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் வரவேற்றார். இதில் 1,243 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்கான பணி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக 700 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். திட்ட இயக்குனர் சங்கர், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், ஒன்றிய செயலாளர் மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருவேங்கடம், புருஷோத்தமன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Masdan ,Peacock Regional Development Office , Tindivanam: Mayiladuthurai Regional Development Office on behalf of the Rural Local Government Department under the Prime Minister's Awas Yojana.
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...