மதுரை: தமிழகத்தில் போதுமான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கே.கே.ரமேஷ் முறையிட்டார். ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறுகிறீர்கள், ஆனால் அதே பிரச்சனை, அதே பாதிப்பு மீண்டும் எழுவது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.