சென்னை : சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கட் கவுண்ட்டர் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருவான்மியூர் ரயில் நிலைய ஊழியரே மனைவியுடன் கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியது அம்பலம் ஆகியுள்ளது. ரூ.1.32 லட்சம் கொள்ளை வழக்கில் திருவான்மியூர் ரயில் நிலைய ஊழியர் டீக்காராம், அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கி முனையில் தம்மை கட்டிப் போட்டு கொள்ளையர்கள் கொள்ளையடித்ததாக டீக்காராம் நாடகமாடியது அம்பலம் ஆகியுள்ளது.