கொடைக்கானல்: கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் கார் மோதி 18 சுற்றுலாப்பயணிகள் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு கடந்த சில நாட்களாக சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வெள்ளி நீர்வீழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கொடைக்கானலில் இருந்து ஈரோடு நோக்கி அதிவேகமாக சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் இருந்த சுற்றுலாப்பயணிகள் மீது மோதியது. கார் மோதியதில் ராணிப்பேட்டை, திண்டுக்கல், அம்பாசமுத்திரம், நெல்லை, ரங்கநாதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் 18 ேபர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 2 டூவீலர்களும் சேதமடைந்தன. விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிந்து கார் டிரைவர் ஈரோட்டை சேர்ந்த முருகனை கைது செய்தனர்.