×

சென்னை-சீரடி விமானம் ரத்து

சென்னை: சென்னை-சீரடி-சென்னை ஆகிய 2 தனியார் பயணிகள் விமானம் மோசமான வானிலை காரணமாக  திடீரென ரத்து செய்யப்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து சீரடி செல்ல வேண்டிய தனியார் பயணிகள் விமானம் நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு புறப்படவேண்டும். அதில் 95 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். அவர்கள் அனைவரும் பகல் ஒரு மணிக்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர். இந்நிலையில்  சீரடியில் மோசமான வானிலை நிலவுவதால் விமானம் தாமதமாக மாலை 4 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று முதலில் அறிவித்தனர். ஆனால்  மாலை 4 மணிக்குக்கு மேலும் வானிலை சீராகவில்லை. எனவே சீரடி செல்லும் விமானத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் சீரடி செல்லும் பயணிகள் அனைவரும் ரூ.600 கட்டணம் செலுத்தி கொரோனா டெஸ்ட் எடுத்திருந்தனர். அவர்களில் பலருக்கு அந்த சான்றிதழை வைத்துக்கொண்டு மறுநாள் விமானத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

Tags : Chennai ,Siradi , Chennai-Siradi flight canceled
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...