×

செல்வபுரத்தில் உடைப்பு ஏற்பட்ட பில்லூர் குழாய் சீரமைத்து இன்று குடிநீர் விநியோகம் செய்யப்படும்

கோவை : கூடலூர் பேரூராட்சியில் உள்ள செல்வபுரத்தில், பில்லூர் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரமாக நடப்பதாக   மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பில்லூர் அணையை நீராதாரமாகக் கொண்ட கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில்  உள்ள 18 பேரூராட்சிகள் மற்றும் 940 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 1,500 மில்லி மீட்டர் விட்டமுள்ள காங்ரீட் குழாயில், கூடலூர் பேரூராட்சியில் உள்ள செல்வபுரத்தில் கடந்த 1ந்தேதி (சனிக்கிழமை) காலை உடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக கான்ரீட் குழாய்க்கு பதிலாக 1,500 மில்லி மீட்டர் எம்.எஸ்.குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாநகரில், துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, காளப்பட்டி, விளாங்குறிச்சி, குறிச்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (3 ந் தேதி) காலை இப்பணிகள் நிறைவுற்று, அன்று பிற்பகல் முதல் மீண்டும் குடிநீர் விநியோகம் துவங்கும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Selvapuram , Coimbatore: In Selvapuram in Cuddalore municipality, the incident took place at the Pillur drinking water pipe
× RELATED இந்திய ஸ்கேட்டிங் அணிக்கு கோவை மாணவர் தேர்வு