ஈரோடு: ஈரோடு காய்கறி வியாபாரியிடம் ரூ.2 கோடி மோசடி செய்த அதிமுக பிரமுகர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டு மணை வாங்கி தருவதாக கூறி வியாபாரிகள் சங்க உறுப்பினர்களிடம் இருந்து ரூ.2 கோடி பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார். அதிமுக பிரமுகர்கள், அவர்களது உறவினர்கள் உள்பட 11 பேர் மீது ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.