தஞ்சாவூர்: தஞ்சாவூரில் 15-18 வயது வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50 மருத்துவ குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளிலேயே சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.