கேரளா: கேரளாவில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறவில்லை என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். கேரளாவில் 152 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 50 பேர் ஒமிக்ரான் அதிகம் பரவிய நாடுகளில் இருந்து திரும்பியவர்கள், 84 பேர் ஒமிக்ரான் குறைந்த அளவில் பரவிய நாடுகளில் இருந்து திரும்பியவர்கள். 18 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தற்போது நிலைமை மோசமடையவில்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்தார்.