சென்னை : ஜிஎஸ்டி செலுத்தாதது தொடர்பான விவகாரத்தில் நேரில் ஆஜராகும்படி தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் நடிகர் விஷாலுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஷால் ஆஜராகாதது சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தை காட்டுவதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.