×

சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

சென்னை : சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்ந்துள்ளது. முன்னதாக துரைமுருகனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி. வருண்குமார் பரிந்துரைத்தார். அதன்பேரில் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சாட்டை துரைமுருகன் திருவள்ளூர் கிளைச் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.


Tags : யூ டியூபர் சாட்டை துரைமுருகன்
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...