×

உபி குற்றவாளிகளிடம் ஜெயில், ஜெயில் கேம்: பிரதமர் மோடி பேச்சு

மீரட்:உத்தர பிரதேச மாநிலத்தில், பிரமாண்டமான முறையில் ‘மேஜர் தயான் சந்த் விளையாட்டு பல்கலைக் கழகம்’ அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல்லை நேற்று நாட்டிய பிரதமர் மோடி, பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: உத்தர பிரதேத்தில் முந்தைய ஆட்சிகளில் குற்றவாளிகள் விளையாடினார்கள். நில மாபியாக்கள் விளையாடினார்கள். பெண்கள் தெருக்களில் நடந்து சென்றால் பகிரங்கமாக கேலி, கிண்டல் செய்யப்பட்டனர். மீரட்டில் வசிக்கும் மக்களும், பிற பகுதியில் வாழ்பவர்களும் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தை மறந்திருக்க மாட்டார்கள். முந்தைய அரசு மாபியாக்களுக்கும், குற்றவாளிகளுக்கும் துணையாக இருந்தது. இந்த கொடுமைகளால் மக்கள் தங்கள் மூதாதையர்கள் வீடுகளில் வசிக்க முடியாமல் காலி செய்து கொண்டு வெளியேறினார்கள்.

ஆனால், தற்போது யோகி ஆதித்யநாத் அரசு, இந்த குற்றவாளிகளிடம் ‘ஜெயில், ஜெயில்’ விளையாட்டு  விளையாடி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மீரட்டில் வசிக்கும் பெண்கள் மாலை நேரம் தங்கள் வீட்டை விட்டு வெளியே பயப்படுவார்கள். ஆனால், தற்போது இங்கு வசிக்கும் பெண்கள் நாட்டுக்கே பெருமை சேர்க்கும் வகையில் விருதுகளை கொண்டு வருகிறார்கள். மக்களுக்கு பாதுகாவலனாக இருப்பதே அரசின் பங்கு. மேலும், மக்களின் திறனை ஊக்குவிக்க வேண்டும். இளைஞர்கள் தவறு செய்தால் அதை தட்டிக் கேட்காமல், சிறுவர்கள் தவறு செய்கிறார்கள் என்று முலாயம் சிங் யாதவ் தலைமையிலான முந்தைய சமாஜ்வாடி கட்சி அலட்சியப்படுத்தியது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Modi , Jail, jail game with UP criminals: Prime Minister Modi's speech
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...