குன்னூர்: குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கும் பாறையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில், கடந்த ஒன்பது மாதமாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதில் கழிவு நீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை கட்டுவதற்கு ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரிவாக்க பணியின் போது பல இடங்களில் ராட்சத பாறைகள் அந்தரத்தில் தொங்கி வருகிறது.
இதனால் மலைப்பாதையில் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சாலையின் ஓரத்தில் உள்ள ராட்சத பாறைகளை உடைக்கும் பணி நடைபெற்று வந்தாலும் அந்தரத்தில் தொங்கும் பாறைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.