×

வருசநாடு அருகே சுற்றுச்சுவர் இல்லாத அரசுப் பள்ளி

வருசநாடு: வருசநாடு அருகே, அரசுப் பள்ளிக்கு, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே, தும்மக்குண்டு ஊராட்சியில், காந்திகிராமம் மலைக்கிராமத்தில் அரசுப் பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5 வரை வகுப்புகள் உள்ளன. இப்பளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், கால்நடைகள் பள்ளிக்குள் வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், பள்ளிக்கு சுற்றுச்சுவர் வேண்டி பல முறை கிராம பொதுமக்களும், பெற்றோர் ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது சம்பந்தமாக அதிகாரிகள் சுற்றுச்சுவர் கட்டுவதாக கூறி ஆய்வு பணி மேற்கொண்டனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.  எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Varusanadu , Government school without perimeter wall near Varusanadu
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்