×

கோவையில் பயிற்சி வகுப்பு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் போலீசாருடன் தகராறு: 5 பேர் மீது வழக்கு

கோவை: கோவையில் போலீசாருடன் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு சாகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியை பள்ளியில் வழங்க கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, மக்கள் அதிகாரி என  பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், பயிற்சி நடக்கும் பகுதியில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அப்பகுதிக்குள் கடந்த 31ம் தேதி நுழைய முயன்றனர். அவர்களை ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் உள்ளே அனுமதிக்கவில்லை. மேலும், போலீசாரை தடுத்து தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடும் தள்ளுமுள்ளு காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிலர், பள்ளி வளாகத்தின் முன் திரண்டனர். அவர்களை போலீசார் வெளியே கூட்டமாக நிற்க கூடாது. கலைந்து செல்லுங்கள், இல்லாவிட்டால் பயிற்சி நடக்கும் வளாகத்திற்குள் செல்லுங்கள் என கூறினர்.

இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். கோவை மாவட்ட செயலாளர் முருகன், பாஜ நிர்வாகி காளிதாஸ், இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தன், ஆர்.எஸ்.எஸ். நி

Tags : Coimbatore ,RSS , Coimbatore, Training Class, RSS, Dispute, Case
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...