×

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டு

மதுரை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார் என  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டு தெரிவித்தார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ‘‘கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார். அவரோடு சேர்ந்து அனைவரும் பணியாற்றி கொரோனா பரவலை குறைக்க வேண்டும். தமிழ் கலாச்சாரத்தையும், பெருமையையும் பற்றி பேசி வரும் பிரதமர் மோடி மதுரை வரும்போது தமிழக மக்கள் அவரை வாழ்த்தி வரவேற்க வேண்டும் என்றார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Former Minister ,Cellur Raju , Corona prevention measure, Chief Minister MK Stalin, former Minister Cellur Raju
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...