சென்னை: நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் பாடல் பதிவுக்காக வடிவேலு, படக்குழுவுடன் லண்டன் சென்றிருந்தார். அங்கிருந்து கடந்த மாதம் இறுதியில் அவர் சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இப்போது கொரோனா தொற்றிலிருந்து வடிவேலு குணமடைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அவர் வீடு திரும்புகிறார்.