×

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் எந்தவித டிக்கெட்டுகளும் வழங்கப்படாது: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் எந்தவித டிக்கெட்டுகளும் வழங்கப்படாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆன்லைனில் ஏற்கனவே ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசன டிக்கெட்டுகள் மற்றும் ஆன்லைன் கல்யாண உற்சவத்தில் தரிசன டிக்கெட்  என அனைத்து டிக்கெட்டுகளும் வழங்கப்பட்ட நிலையில் திருப்பதியில் எந்தவித டிக்கெட்டுகளும் பக்தர்களுக்கு வழங்கப்படாது.

ஜனவரி 13-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காண இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியை சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் திருப்பதி ஆதார் முகவரி கொண்டவர்களுக்கு மட்டும் தினந்தோறும் ஐந்தாயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும். எனவே வெளி மாவட்ட மற்றும்  வெளி மாநில பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை பெற வரவேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Tags : Tirupati Ezhumalayan Temple ,Swami ,Tirupati , Tirupati, Swami to the temple, Darshan, Devasthanam announcement
× RELATED ராமகிருஷ்ண மிஷனின் புதிய தலைவராக சுவாமி கவுதமானந்தாஜி மகாராஜ் தேர்வு