×

உசிலம்பட்டியில் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர் கைது: உடந்தையாக இருந்த சகோதரரும் சிக்கினார்

உசிலம்பட்டி:  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் தனது குடும்ப நிலத்தை அளவீடு செய்வதற்காக உசிலம்பட்டி நகர குறுவட்ட சர்வேயர் காஞ்சனாவை அணுகினார். அப்போது சர்வேயரின் சகோதரர் செந்தில்குமார் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரஞ்சித்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவர்களது ஆலோசனையின்பேரில், நில அளவர் காஞ்சனாவிடம் நேற்று ரூ.4 ஆயிரம் பணத்தை ரஞ்சித்குமார் வழங்கினார்.

அப்போது மறைந்திருந்த டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லஞ்சம் பெற்ற சர்வேயரை கையும்களவுமாக பிடித்தனர். அவரிடம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இறுதியில் சர்வேயர் காஞ்சனா, அவருக்கு உறுதுணையாக இருந்த சகோதரர் செந்தில்குமாரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.4 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Usilampatti , Bribe, female surveyor, arrested, brother
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...