×

6 லட்சம் குடும்பங்களுக்கு சலுகையில் பால் அட்டை: ஆவின் நிர்வாகம் தகவல்

சென்னை: ஆவின் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆவின் பால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. ஆவினின் அடையாளமாக பொதுமக்களுக்கு அதிகபட்ச விலையில் இருந்து மேலும் குறைத்து சலுகை விலையில் பால் அட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை சென்னையில் சுமார் 6 லட்சம் குடும்பங்கள் பிரதி மாதம் பால் அட்டையை சலுகை விலையில் (மாதம் லிட்டர் ஒன்றுக்கு ரூ.60 முதல் ரூ.90 வரை சேமிப்பு) பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும், அனைத்து பொதுமக்களும் இத்தகைய சலுகையை பெற ஜனவரி மாதம் முழுவதும் ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஆவின் அதிநவீன பாலகங்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

ஆவின் பால் அட்டையை பெற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்கும் பட்சத்தில் உடனடியாக பால் அட்டை வழங்கப்படும். பாலகங்களில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டும் மறுநாள் ஆவின் வட்டார அலுவலர்கள் மூலம் பால் அட்டை வழங்கப்படும். மேலும், www.aavin.tn.gov.in, www.aavinmilk.com என்ற இணையதளம் வாயிலாகவும் புதிய பால் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகை பால் அட்டை பொது மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.      


Tags : Family, offer, milk card, spirit administration
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...