×

நங்காஞ்சியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், இடையகோட்டை கிராமம், நங்காஞ்சியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 02.01.2022 முதல் 16.02.2022 வரை 45 நாட்களுக்கு 220.440 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விடஅரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2615 ஏக்கர் நிலங்களும் மற்றும் கரூர் மாவட்டத்தில் 3635 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 6250 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Nanganjyaram Reservoir , Government orders to open water from Nanganjiyaru reservoir from 2nd
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு