×

வத்திராயிருப்பு அருகே லிங்கம் கோயில் ஓடைப்பகுதியில் தடுப்பணை அமைக்க வலியுறுத்தல்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயில் பகுதியில் மழை பெய்தால் லிங்கம் கோயில் ஓடை வழியாக மாத்துார்குளம், ஆலங்குளம் ஆகிய கண்மாய்களுக்குச் தண்ணீர் செல்கிறது. லிங்கம் கோயில் ஓடையில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளதால் தற்காலிக சாலை இருந்த இடத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அளவுக்கு அதிகமான தண்ணீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, தற்காலிக சாலையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. தற்காலிக சாலை உடைப்பிற்கு பிறகு புதிய பாலம் வழியாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

தற்காலிக சாலை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தடுப்பணை கட்டினால், அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால், விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும், தடுப்பணைகள் கட்டினால் கோயிலுக்குச் செல்லக்கூடிய பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, அந்த பகுதியில் உள்ளவர்கள் என அனைவரும் தடுப்பணைகள் தண்ணீர் தேங்கியிருக்கும்போது குளித்து செல்ல நல்வாய்ப்பாக அமையும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



Tags : Lingam temple stream ,Vatriyiruppu , Urging to set up a dam in the Lingam temple stream near Vatriyiruppu
× RELATED வத்திராயிருப்பு அருகே லிங்கம் கோயில்...