×

எதிர்பாராத மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது, நிலைமை விரைந்து சீர்செய்யப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வானிலைக் கணிப்புகளையும் மீறிக் கொட்டித் தீர்க்கிறது மழை. எதிர்பாராத மாமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து திரும்பியவுடன், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திற்கு வந்து, எடுக்கப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிலைமை விரைந்து சீர்செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களும் கவனமுடன் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வதோடு, மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags : CM ,Md. KKA Stalin , mk stalin
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...