×

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரி நியமனம்.!

சென்னை: தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரி நியமனம் செய்யயப்பட்டுள்ளார். புத்தொழில்களுக்கு, உந்துசக்தியாகவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான துடிப்பான தொடக்க சூழலை கட்டமைப்பதற்கும் புத்தாக்கத்தால் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (Tamil Nadu Startup and Innovation Mission) எனும் TANSIM வழிவகுக்கிறது.

புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தில்,  திறமையும் அனுபவமும் கொண்ட ஒரு தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க தமிழ்நாடு அரசால் தீர்மானிக்கப்பட்டு அதன் அடிப்படையில், திரு. சிவராஜா இராமநாதன் அவர்கள் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். தமிழ்நாட்டில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் ஒரு உன்னதமான புத்தொழில் சூழலையும், புத்தொழில் நிறுவனங்கள் மேலும் மேம்பட புத்தொழில் முனைவோர்களுக்கான தளத்தை நிர்வகிக்கும் திரு. சிவராஜா இராமநாதன் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக  தொழில் முனைவில் 25 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் பெற்றவர்.

தமிழ்நாடு புத்தொழில் மற்றம் புத்தாக்க இயக்கத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக ஜனவரி 2022 முதல் வாரத்தில் பதவி ஏற்க இருக்கும் திரு. சிவராஜா இராமநாதன் அவர்களின்  தலைமையின் கீழ் தமிழ்நாடு அரசின் TANSIM இயக்கம் மூலமாக புத்தொழில்களுக்கான சூழல்  உருவாக்கத்தில் மாநிலம் பன்மடங்கு உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags : Tamil Nadu Buddha and New Movement , Appointment of CEO for Tamil Nadu Business and Innovation Movement!
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...