உ.பி.: உ.பி.யில் திட்டமிட்டப்படி தேர்தல் நடத்த கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன என தலைமைத் தேர்தல் ஆணையர் கூறினார். ஒமிக்ரான் காரணமாக சட்டமன்றத் தேர்தலை தள்ளிவைக்க முடியமா என உயர்நீதிமன்றம் கேட்ட நிலையில் ஆலோசனை நடத்த உள்ளோம் என தெரிவித்தார். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டும் என கட்சிகள் கூறியுள்ளன என கூறினார். அனைத்து வாக்கு சாவடிகளிலும் VVPAT இயந்திரங்கள் வைக்கப்படும் என தெரிவித்தார்.