பூந்தமல்லி: சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 22 வயது பெண். இவர், பூந்தமல்லி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘’தனது உறவுக்காரர் ரமேஷ்(25) என்பவர் தனது புகைப்படத்தை சமூகவலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.இதன் அடிப்படையில், பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், ரமேஷ், அந்த பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பதிவேற்றம் செய்ததுடன் அந்த பெண்ணின் குரலிலேயே ஆபாசமாக பேசி பணம் பறித்துள்ளார் என்று தெரியவந்தது. இதையடுத்து ரமேஷை கைது செய்து அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.