×

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்

சென்னை: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முழுமையாக தடை விதிக்கக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. நாடு முழுவதுமாக கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் சில கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று ஜெகன்நாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். வழக்காக தாக்கல் செய்யுமாறு பணித்த நீதிமன்றம் இன்று பிற்பகல் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உள்ளது. புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் குவிகின்றனர் என்பது மனுதாரரின் குற்றச்சாட்டு. எனவே இது ஒமிக்ரான் பரவலுக்கு வழிவகுத்துவிடும் என்று மனுதாரர் கூறியுள்ளார்.


Tags : New Year , New Year, New Year Celebration, iCord
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!