மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கடந்த 1992ம் ஆண்டு முதல் இந்திய நாட்டிய நிகழ்ச்சி ஆண்டு தோறும் டிசம்பர் முதல் ஜனவரி வரை நடக்கும். இந்நிலையில், இந்தாண்டு கடந்த 23ம் தேதி, மாமல்லபுரத்தில் நாட்டிய விழா தொடங்கியது. இதையொட்டி விழாவின் 6ம் நாளான நேற்று, நாமக்கல் பிரபு வேணுகோபால் கலை குழுவின் கிராமிய நடனம், சென்னை ரேகா ராம்மோகன், காஞ்சிபுரம் மீனாட்சி ராகவன் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. இந்த நாட்டிய விழாவை ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.