திருவள்ளூர்: இந்திய தேசிய காங்கிரஸின் 137வது ஆண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமையில் நகர தலைவர் வழக்கறிஞர் வி.இ.ஜான் கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், கொடி ஏற்றியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் ஜெ.டி.அருள்மொழி, தளபதி மூர்த்தி, சரஸ்வதி, வி.எஸ்.ரகுராமன், எம்.சி.பிரபாகரன், எஸ்.செல்வகுமார், எஸ்.எஸ்.சரவணன், பிரகாஷ், டி.வடிவேலு, வி.எம்.தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் ஒய்.அஸ்வின்குமார், ஜே.கே.வெங்கடேஷ் ஆகியோர் வரவேற்றனர். இதில் நகர பொறுப்பாளர்கள் மனோகரன், பாடல் ஈஸ்வரன், ஜோதி, சுதாகர், மோகன்ராஜ், ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.