×

வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்

புழல்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 97வது பிறந்த நாள் தேசிய நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நேற்று மாவட்ட இளைஞரணி சார்பில்,  ரத்த தான முகாம் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில்  நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.ராஜா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் வினோத்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 85 பேர் பங்கேற்று ரத்த தானம் வழங்கினார்கள்.


Tags : Vajbai , Blood donation camp on the eve of Vajpayee's birthday
× RELATED இந்தியாவின் மிக நீளமான ‘அடல் பிஹாரி...